பிரபல போராட்டக்காரர், தனிஷ் அலி சந்திரிகாவின் மேடையில்!
முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவும் காலி முகத்திடல் போராட்ட களத்தில் முன்னணியில் இருந்த தனிஷ் அலியும் ஒரே அரசியல் தளத்தில் பிரவேசித்துள்ளனர்.
குமார வெல்கம தலைமையிலான புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டத்திலேயே அந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
போராட்டத்தின் போது தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து நிகழ்ச்சிகளை மாற்றியதாக தனிஷ் அலி மீது தொடரப்பட்ட வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments